Type Here to Get Search Results !

தனிப்பாடல் போட்டி – "வந்தே மாதரம்" : பாடலும் பொருளும்



தனிப்பாடல் போட்டி – "வந்தே மாதரம்" : பாடலும் பொருளும்


வந்தே மாதரம்,
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதலாம்
ஸஸ்ய ஸ்யாமலாம் மாதரம்
சுப்ர ஜ்யோத்ஸ்னா புலகித யாமினீம்
புல்ல குஸுமித த்ருமதல சோபினீம்
ஸுஹாஸினீம் ஸுமதுர பாஷிணீம்
ஸுகதாம் வரதாம் மாதரம், வந்தே மாதரம்
கோடி கோடி கண்ட கலகல நிநாத கராலே
கோடி கோடி புஜைர் த்ருதகர கரவாலே
அபலா கேனோ மா யதோ பலே
பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம், ரிபுதல வாரிணீம்
துமி வித்யா, துமி தர்ம, துமி ஹ்ருதி, துமி மர்ம
த்வம் ஹி ப்ராணா: சரீரே
பாஹுதே துமி மா சக்தி, ஹ்ருதயே துமி மா பக்தி
தோமாரயி ப்ரதிமா கடி மந்திரே, மந்திரே
த்வம்ஹி துர்கா தசப்ரஹரண தாரிணீ
கமலா கமலதல விஹாரிணீ, வாணீ வித்யா தாயினீ
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்
ஸ்யாமலாம் ஸரலாம் ஸுஸ்மிதாம் பூஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம்
வந்தே மாதரம், வந்தே மாதரம்.

தாயே வணங்குகிறோம்.


இனிய நீர், இன்சுவைக் கனிகள், தென்றல் காற்றின் தெள்ளிய தண்மை, மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமையுடன் விளங்கும் எங்கள் தாயே உன்னை வணங்குகிறோம்.

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள், இதழ் விரித்தெழம் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள், எழில்மிகு புன்னகை இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள் உடையவளே! சுகமளிப்பவளே! வரமளிப்பவளே! தாயே! உன்னை வணங்குகிறோம்.

கோடிக் கோடிக் குரல்கள் உன் திருப்பெயர் முழங்கவும், கோடிக் கோடிக் கரங்கள் உன்காலடிக் கீழ் வாளேந்தியும் நிற்கின்றனர். அப்படியிருக்க அம்மா! திறனற்றவள் என்று உன்னை அழைப்பவர் எவர்? பேராற்றல் பெற்றவள், பேறு தருபவள், பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள் நீயன்றோ! தாயே உன்னை வணங்குகிறோம். அறிவு நீ, அறம் நீ, இதயம் நீ, உணர்வும் நீ. எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ, எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ. ஆலயங்கள்தோறும் ஆராதனை பெறும் தெய்வச் சிலைகளில் திகழம் ஒளி நீ. தாயே உன்னை வணங்குகிறோம்.

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும் அன்னை துர்க்கை நீயே, செங்கமல மலர் இதழ்களில் உறையும் செல்வத் திருமகள் நீயே, கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே. தாயே உன்னை வணங்குகிறோம்.

திருமகளே! மாசற்ற பண்புகளின் மனையகமே! ஒப்புயவர்வற்றவளே! இனிய நீரும், இன்சுவைக் கனிகளும் நிறைந்தவளே! சியாமள நிறமுடைய அழகியே! எளிமை பொங்கும் தாயே! புன்முறுவல் பூத்தவளே! பொன் அணிகள் பூண்டவளே! எங்களைப் பெற்று வளர்த்தவளே! பெருமைகள் அனைத்தும் அளித்தவளே! தாயே உன்னை வணங்குகிறோம்.

சுருக்கமான பொருள் (போட்டிக்காக மனப்பாடம் செய்ய ஏற்றது)

"வந்தே மாதரம்" பாடல், இந்தியத் தாய்நாட்டின் இயற்கை வளம், அழகு, செழிப்பு, வீரம், அறிவு, ஆன்மிகப் பெருமை ஆகியவற்றைப் போற்றுகிறது. தாய்நாடு நமக்கு வாழ்வையும் வளத்தையும் அளிக்கும் தெய்வமாகக் கருதப்படுகிறது. அதன் பெருமையை உணர்ந்து, நாட்டை நேசித்து, காத்து, உயர்த்த வேண்டும் என்ற தேசிய உணர்வை இந்தப் பாடல் நமக்குக் கற்பிக்கிறது.

போட்டியில் கூற வேண்டிய நிறைவுரை

"எங்கள் தாய்நாடு இயற்கை வளமும், ஆன்மிகப் பெருமையும், வீரமும், அறிவும் நிறைந்த புனித பூமி. அதனை அன்புடன் போற்றி, அதன் ஒற்றுமையையும் உயர்வையும் காக்க வேண்டும் என்பதே 'வந்தே மாதரம்' பாடலின் மையச் செய்தியாகும். நன்றி."

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ஐயா தனிப்பாடல் போட்டி எப்போது எங்கே வைத்து நடைபெறுகிறது என்பதை தெளிவாக குறிப்பிடவும். நன்றி.

    ReplyDelete
  2. Date and time.... தனிப்பாடல் போட்டி

    ReplyDelete